கொரோனா பாதிப்பால் சீக்கிய மத போதகர் பலி!
கொரொனா பாதிப்பால் சீக்கிய மத போதகர் 15 கிராமங்களில் உள்ள நாற்பதாயிரம் கிராம மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.70 வயதான முதியவர் ஒருவருக்கு கொரொனா வைரஸ் இருந்தது அவரது மரணத்திற்கு பிறகு தான் கண்டறியப்பட்டது.
வைரசால் இறந்தவர் இறப்பதற்கு சற்று முன்பு கோலாவின் சீக்கிய பண்டிகையை கொண்டாட ஒரு பெரிய கூட்டத்திற்கு சென்றிருந்தார். ஆறு நாள் திருவிழா ஒவ்வொரு நாளும் 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டுள்ளனர்.
போதகரான அந்த நபர் இத்தாலி மற்றும் ஜெர்மன் பயணத்திலிருந்து திரும்பிய பின்னர் சுய தனிமைப்படுத்தல் ஆலோசனையை புறக்கணித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து வட பஞ்சாபில் உள்ள 20 கிராமங்களை சேர்ந்த சுமார் 40 ஆயிரம் குடியிருப்புகளில் இந்திய அதிகாரிகள் தனிமைப்படுத்தியுள்ளனர்.







