“கலெக்டர் வீட்டிலேயே கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்!!” கடலூர் ஆட்சியர் வீட்டில் 50 பவுன் கொள்ளை!!
கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச் செழியனின் வீட்டில் 50 பவுன் நகை அலை கொள்ளையர் அபேஸ் செய்த துணிகர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்ட ஆட்சியராக இருப்பவர் அன்புச்செல்வன். இவரது பூர்வீகம் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே நாடியம் கிராமம் இங்கு இவரது வீடு உள்ளது. இந்த வீடு பூட்டியிருந்த நிலையில், நேற்றிரவு கொள்ளையர்கள் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்துள்ளனர்.
வீட்டின் பீரோவையும் உடைத்து அதில் இருந்த 50 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.







