டிச.26 அன்று காலை 09.30 மணிக்கு வானில் அற்புத காட்சி தெரியும்
தமிழகத்தில் வரும் 26-ஆம் தேதி வளைய சூரிய கிரகணம் நிகழ உள்ளது. காலை 8 மணி முதல் 11.15 வரை இந்த அரிய நிகழ்வு நடைபெறும். குறிப்பாக உதகை, கோவை, திருப்பூர், அவிநாசி ,புதுக்கோட்டை, ஈரோடு, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் வளைய வடிவ சூரிய கிரகணம் மிகத்துல்லியமாக தெரியும் என விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
வளைய சூரிய கிரகணத்தின்போது சூரியன் ஒரு நெருப்பு வளையம் போல காட்சியளிக்கும். பிரத்யேகமாக உள்ள கண்ணாடியை பயன்படுத்தி மட்டுமே சூரிய கிரகணத்தை பார்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.






