கடந்த 6 மாதங்களில் 1.6 லட்சம் இன்ஸ்டா கணக்குகள் முடக்கம் – மெட்டா நிறுவனம் அறிவிப்பு
இந்தியாவில் கடந்த 6 மாதங்களில் ஏ,ஐ-யை பயன்படுத்தி செயல்பட்ட 1.6 லட்சம் இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகத்தை ஊக்குவிக்கும் வகையிலான விளம்பரங்கள் இடம்பெற்றதாக மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பிய நிலையில், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தங்கள் தளங்களில் தவறான உள்ளடக்கம் இடம்பெறுவதை ஒருபோதும் விரும்புவதில்லை என்றும் தொடர்ந்து தடுப்போம் என்றும் மெட்டா விளக்கம் அளித்துள்ளது.





