போலிச் செய்திகள், இமெயில் குறித்து எச்சரிக்கும் என்.டி.ஏ..!
தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு தங்களின் அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்யுமாறு நினைவூட்டல் குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் மற்றும் வாட்ஸ்அப் அறிவிப்புகள் அனுப்பப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.
“NICPEP” என்ற அனுப்புநர் அடையாளத்தில் வரும் செய்திகள் மட்டுமே உண்மையானவை. no-reply.neet.nta@nic.in என்ற முகவரியில் வரும் மின்னஞ்சல்களை மட்டுமே நம்ப வேண்டும். மாணவர்கள் neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.





