பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்றம்: முழு கடன் ரத்து கோரி சிபிஐ வலியுறுத்தல்!
ரூ.50,000 வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு, தலைமுறை தலைமுறையாக கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளின் துயரத்தை போக்க போதுமானதல்ல என்றும், இது விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிப்பதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) தெரிவித்துள்ளது.
மேலும், நிவாரணம் சாகுபடி நில அளவை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பண மதிப்பை அடிப்படையாக வைத்து கடன் தள்ளுபடி செய்யும் புதிய முறை ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் கட்சி விமர்சித்துள்ளது. மாவட்டத்திற்கு மாவட்டம் சாகுபடி செலவுகள் மாறுபடுவதால், 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என CPI வலியுறுத்தியுள்ளது.





