சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையை திருவாரூரில் முதலமைச்சர் நாளை தொடங்க உள்ளார். பேரறிஞரின் நினைவு இல்லத்தில் மரியாதை செய்து காஞ்சிபுரத்தில் இன்று நான் தொடங்கியுள்ளேன். ஆனால், பா.ஜ.க போட்டியிடும் தொகுதியான மயிலாப்பூரில் தனது பரப்புரையை எடப்பாடி பழனிசாமி தொடங்கினார் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.