கூட்டணி கட்சித் தலைவர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி கூட்டணிக் கட்சியினருடன் முதல்வரும் தி.மு.க தலைவருமான மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனையில், காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, துரை வைகோ, மனிதநேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா, எஸ்டிபிஐ முபாரக், மஜகவின் தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.





