இ.பி.எஸ் நாளை முதல் பிரசாரம் – மயிலாப்பூரில் தொடங்கி தமிழகம் முழுவதும் வாக்குச் சேகரிப்பு
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தை நாளை தொடங்குகிறார்.
நாளை (மார்ச் 25) சென்னையில் உள்ள மயிலாப்பூரில் தனது பிரசாரப் பயணத்தைத் தொடங்கும் அவர், தொடர்ந்து ஏப்ரல் 1-ஆம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு அ.தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்குச் சேகரிக்க உள்ளார்.





