குழந்தைகளுக்கு இரத்தசோகையை தடுக்க ஒரு ஸ்பூன் முருங்கை இலைப் பொடி: செளமியா சுவாமிநாதன்
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தியதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைப் பாராட்டிய உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன், உணவில் ஒரு ஸ்பூன் முருங்கை இலை பொடியை சேர்க்குமாறு முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தார்.
முருங்கை இலை பொடியை சேர்ப்பதால் ரத்தசோகை தடுக்கப்படும் என்றும், ‘குழந்தைகள் நலமே, நாட்டின் வளம்’ என்றும் சௌமியா சுவாமிநாதன் கூறினார்.






