சுனாமி எச்சரிக்கை: ஜப்பானில் 20 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுரை
ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், சுமார் 20 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஜப்பானின் ஃபுகுஷிமா அணுமின் நிலையங்களில் இருந்து ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். மேலும், இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக, சீனா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, பெரு உள்ளிட்ட நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




