தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்றிய எஸ்.ஐ.!
காதல் தோல்வியால், சென்னை தி.நகரில் 27 வயது பெண், 4-வது மாடியில் இருந்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். உடனே, அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுக்க, சென்னை மாம்பலம் sI மீரா, தொலைபேசி மூலம் அப்பெண்ணிடம் ஆறுதலாக பேசத் தொடங்கியுள்ளார்.
இதனால், அப்பெண் கொஞ்சம் இயல்படைய, பால்கனியில் இருந்த அவரை போலீசார் காப்பாற்றியுள்ளனர். சமயோஜிதமாக செயல்பட்ட Si மீராவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.





