IPL: நிறுத்தப்பட்ட போட்டியை மீண்டும் நடத்த திட்டம்
போர் பதற்றத்தால், PBKS vs DC போட்டி பாதியில் நிறுத்தப்பட்டு IPL தொடர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த போட்டியை மீண்டும் தொடங்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிலைமை சீராகி மீண்டும் IPL தொடங்கும்போது, அந்த போட்டியை ஏற்கனவே விளையாடி தடைபட்ட ஓவரில் இருந்து தொடர முடிவு செய்யப்பட்டுள்ளதாம். முதலில் PBKS பேட்டிங் செய்து 10.1 ஓவர்களில் 122/1 ரன்கள் எடுத்திருந்தது.





