111 விவசாயிகள் சாகும் வரை உண்ணாவிரதம்..!
விவசாய சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங்கின் உண்ணாவிரதம் 50ஆவது நாளை தொட்ட நிலையில், அவருக்கு ஆதரவாக 111 விவசாயிகள் இன்று முதல் சாகும் வரை உண்ணாவிரதம் அறிவித்துள்ளனர்.
விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, உண்ணாவிரதம் இருந்துவரும் ஜக்ஜித் சிங்கின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. உடல் உறுப்புகள் செயலிழந்து போகும் என டாக்டர்கள் எச்சரித்தும், அவர் போராட்டத்தை கைவிடவில்லை.






