கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி காலமானார்!
கோவையில் 1998-ம் ஆண்டு நிகழ்ந்த குண்டுவெடிப்பு தமிழகத்தையே உலுக்கியது. இந்த சம்பவத்தில் 46 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதையடுத்து, இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக அல் உம்மா இயக்கத்தின் தலைவர் எஸ்.ஏ. பாஷா உள்ளிட்ட 13 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த எஸ்.ஏ. பாஷா (75) உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.





