--- --:--:-- --

ரூ.3,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது..!

4

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே பட்டா திருத்தம் செய்வதற்கு 3000 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

சீரமங்கலத்தைச் சேர்ந்த புஷ்பா என்பவர் தனது விளை நிலத்திற்கு பட்டா திருத்தம் செய்வதற்காக சீயமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் ரமேஷிடம் விண்ணப்பித்திருந்தார். அதற்கு அவர் 3,000 ரூபாய் லஞ்சம் கேட்டதால் திருவண்ணாமலை மாவட்டம் லஞ்ச ஒழிப்புத்துறையில் தகவல் தெரிவித்துள்ளார்.

 

அவர்கள் கொடுத்த ரசாயனம் தடவிய 3000 ரூபாய் லஞ்ச பணத்தை அளித்துள்ளார். அதை அவர் வாங்கிய பொழுது லஞ்ச ஒழிப்பு துறையினர் மறைந்திருந்து பிடித்தனர். 7 மணி நேரம் விசாரணைக்கு பிறகு ரமேஷை கைது செய்தனர்.

 

Right Menu Icon