ரத்தம் சொட்ட சொட்ட கழுத்தில் வெட்டு காயத்துடன் ஓடிய மூதாட்டி..!
திருச்சியில் கழுத்தில் வெட்டுப்பட்ட காயத்துடன் ரத்தம் சொட்ட சொட்ட சாலையில் 65 வயது பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பச்சையம்மாள் என்ற பெண் குடிசை வீடு ஒன்றில் தனியாக வசித்து வந்ததாக தெரிகிறது.
அவர் கழுத்தில் ரத்த காயத்துடன் ஓடியதை பார்த்து ஆம்புலன்ஸில் ஏற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக தெரிகிறது. பச்சையம்மாளை வெட்டியது யார் கொள்ளையர்கள் கைவரிசையா என விசாரித்து வருவதாக விசாரணை நடத்தி வருகின்றனர்.





