மஞ்சுவிரட்டு போட்டியில் ஏற்பட்ட முன் விரோதம்..அண்ணன், தம்பியை கொலை செய்த மர்ம கும்பல்..!
சிவகங்கை அருகே கல்லணை பகுதியில் நள்ளிரவு நேரத்தில் சகோதரர்களான சுபாஷ், சூர்யா ஆகியோர் மஞ்சுவிரட்டுக்காக மாடுகளை பழக்கி கொண்டிருந்த பொழுது பைக்குகளில் வந்த எட்டு பேர் கொண்ட கும்பல் சகோதரர்களை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றது.
மஞ்சுவிரட்டில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.






