அத்திப்பழ சாட்டில் பிளேடு.. இழப்பீடு வழங்கிய ஏர் இந்தியா.. வாங்க மறுத்த பயணி..!
கடந்த ஜூன் 9ம் தேதி ஏர் இந்தியா விமானம் பெங்களூரில் இருந்து சேண்ட் பிரான்சிஸ்கோ சென்றது. அந்த விமானத்தில் வழங்கப்பட்ட அத்திப்பழ சாட் உணவில் பிளேடு இருந்ததாக பத்திரிக்கையாளர் சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.
உணவை சிறிது நேரம் தின்ற போது தான் பிளேடு இருந்தது தெரிய வந்ததாகவும் சிறுவர்கள் சாப்பிட்டு இருந்தால் என்னவாக இருக்கும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது. மேலும் காய்கறிகளை வெட்டும் இயந்திரத்தில் உள்ள பிளேடு உடைந்து உணவில் கலந்தது தெரியவந்துள்ளது.
இதனை தலைமை வாடிக்கையாளர் அனுபவ அதிகாரி, ராஜேஷ் உறுதி செய்துள்ளார். இந்நிலையில் ஆல் இந்தியா நிறுவனம் தனக்கு இழப்பீடு வழங்கியதாகவும் ஆனால் அதனை வாங்க தான் மறுத்ததாகவும் பத்திரிக்கையாளர் தெரிவித்துள்ளார்.






