துப்பாக்கி குண்டு பாய்ந்து சி.ஐ.எஸ்.எஃப் வீரர் மரணம்!
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் இரவுப் பணி முடிந்து புறப்பட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் ரவி கிரண் என்பவர் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளனர்.
கல்பாக்கம் அணுசக்தி மருத்துவ மனையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பிரேதபரிசோதனை இன்று நடைபெறவுள்ளது. எதிர்பாராமல் துப்பாக்கி வெடித்ததா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






