பெங்களூரில் பெய்த பலத்த மழையால் தரையிறங்க முடியாத விமானம்..!
பெங்களூர் விமான நிலைய பகுதியில் பலத்த சூறை காற்று மற்றும் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருவதால் டெல்லி, மும்பை, கொல்கத்தாவில் இருந்தவர்கள் எட்டு விமானங்கள் தரையிறங்க முடியாமல் சென்னைக்கு திருப்பி விடப்பட்டு தரை இறங்கி உள்ளன.
பயணிகள் அனைவரும் அந்தந்த விமானங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு, குடிநீர் வழங்கப்படுவதாகவும் வானிலை சீரானதும் விமானங்கள் திருப்பி அனுப்பப்படும் எனவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.





