அண்ணன், தம்பி நீரில் மூழ்கி உயிரிழப்பு..!
கடலூர் மாவட்டத்தில் உள்ள குளத்தில் விளையாட இறங்கிய அண்ணன், தம்பி இருவரும் ஆழமான பகுதியில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
கடலூரில் மன வளர்ச்சி குன்றியவர்களுக்கான பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த இருவரும் கோடை விடுமுறையை முடித்து பாட்டி வீட்டிற்கு வந்திருந்த நிலையில் நடந்த இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.





