நலத்திட்ட விழாவில் வழங்கப்படவிருந்த குடங்களை எடுத்துச் சென்ற பொதுமக்கள்..!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக அதிமுகவினர் வைத்திருந்த குடங்களை பொதுமக்கள் எடுத்துச் சென்றனர்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவையொட்டி அதிமுக சார்பில் சைக்கிள், தையல் இயந்திரம், இஸ்திரி பெட்டி, சில்வர் குடங்கள் வழங்கப்பட இருந்தன. இந்த நிலையில் வாகனத்தில் இருந்த குடங்களை கூட்டத்திற்கு வந்த பொதுமக்கள் மற்றும் அதிமுகவினர் அள்ளிச் சென்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





