வீட்டிற்குள் புகுந்த ஐந்தடி நீளம் கொண்ட சாரைப்பாம்பு..!
திருப்பூரில் வீட்டிற்குள் புகுந்து ஐந்து அடி நீளம் உள்ள சாரைப்பாம்பை வனத்துறையினர் லாவகமாக பிடித்து வனத்துறையில் விட்டனர். திருப்பூர் கொங்கு மெயின் ரோடு நான்காவது வீதியில் வசித்து வரும் சண்முகம் அவரது வீட்டிற்குள் திடீரென பாம்பு வந்துள்ளது.
இதனால் அக்கம் பக்கத்தில் தகவல் அளித்த நிலையில் வனத்துறையினர் அங்கு சென்ற பாம்பை பத்திரமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.






