சொத்துக்காக மகன் அடித்து துன்புறுத்துவதாக தாய் புகார்..!
சொத்துக்காக மகன் தன்னை தகாத வார்த்தைகளால் திட்டி துன்புறுத்துவதாக மூதாட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் அரியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சேர்ந்த மூதாட்டி அவரது கணவருடன் குறைவால் உயிரிழந்தார்.
இந்நிலையில் தன்னை பராமரித்து வந்த மூத்த மகளுக்கு தனது சொத்தின் ஒரு பகுதியை தானமாக எழுதிக் கொடுத்துள்ளார். சிங்கப்பூரில் இருந்து வந்த அவரின் மகன் சொத்தை தனக்கு கொடுக்கும்படி தகராறு செய்துள்ளான்.
70 வயதான தன்னை தாய் என்றும் பாராமல் தகாத வார்த்தைகளால் திட்டி அடித்து துன்புறுத்துவதாகவும் சிசிடிவி ஆதாரத்துடன் மூதாட்டி புகார் அளித்துள்ளார்.





