செல்போனில் பேசியபடி சென்ற இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு..!
தொடர் மழையால் ஏற்பட்ட விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை தியாகராய நகரில் வாலி மஹால் எதிரே உள்ள மேம்பாலத்தின் கீழ் மின்கம்பத்தில் இருந்து பாய்ந்த மின்சாரம் தாக்கி அசாம் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த காவல்துறையினரும் தீயணைப்பு துறையினரும் உயிரிழந்த இளைஞரின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.






