தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு..!
19 மாவட்டங்களுக்கு இன்று மண்டல வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. தெற்கு அந்தமான் கடல் பகுதிகளின் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்கிழக்கு உன் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 19 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்று மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை உட்பட 19 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது






