தென்காசி அருகே சூறாவளி காற்றில் டிரான்ஸ்பார்மர் மீது விழுந்த தகரம்..!
சங்கரன்கோவிலில் வீசிய சூறாவளி காற்றால் தகர மேற்கூரை மின்கம்பத்தின் மீது விழுந்ததில் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் திடீரென பலத்த சூறாவளி காற்று வீசியது.
இதையடுத்து சலூன் கடையில் போடப்பட்டிருந்த தகரம், மேற்கு கூரை மின்கம்பத்தில் விழுந்ததில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. உடனடியாக விரைந்த மின்வாரியத்தினர் அதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனால் 3 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.






