ராணுவ வீரரை குத்திக் கொன்ற காளை..!
உத்திர பிரதேசத்தில் ராணுவ வீரரை குத்திக் கொன்ற காளை பிடிபட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் காளை முட்டியதில் அதில் பயணித்த அங்கீத் குமார் என்ற ராணுவ வீரர் காயம் ஏற்பட்டு அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது மனைவியும் குழந்தைகளும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காய்கறி வியாபாரி ஒருவரையும் அந்த காளை குத்திக் கொன்றது.
இதேபோல் பலரை தாக்கியதையடுத்து கால்நடை வளர்ப்பு துறை அதிகாரிகள் குழு அமைத்து காளையை மடக்கி பிடித்துள்ளனர். காளையை கட்டுப்படுத்த பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.






