--- --:--:-- --

பொங்கல் பரிசு தொகுப்பில் திடீர் மாற்றமா..?

4

பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஜனவரி முதல் வாரத்தில் இருந்து விநியோகிக்கப்பட உள்ள இந்த பரிசுத்தொகுப்பு கரும்பு வழங்குவது குறித்து பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 

பொங்கல் பரிசு தொகுப்புக்காக அரசே நல்ல விலைக்கு கரும்பை கொள்முதல் செய்யும் என்ற நம்பிக்கையில் கரும்பை பயிரிட்டதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் பொங்கல் பரிசு தொகப்பில் கரும்பு இடம்பெறாததால் குறைந்த விலைக்கு விற்க வேண்டியதாகவும் அதன் காரணமாக கரும்பு விவசாயிகள் குடும்பத்தினர் திருப்தியாக பொங்கல் கொண்டாட முடியாத நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

பொங்கல் பண்டிகையும் கரும்பையும் பிரிக்க முடியாது என்பதால் பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க கோரி அரசுக்கு மனு அளிப்பதாகவும் அதை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Right Menu Icon