தனுஷ் – ஐஸ்வர்யா மகனின் கையில் காயம்..புகைப்படத்தால் அதிர்ச்சி..!
தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் இனி தனியாக வாழ முடிவெடுத்துள்ளதாக சில மாதங்களுக்கு முன் அறிவித்தனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது மகன்களின் புகைப்படங்களை அவ்வப்போது தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவு செய்வார்.
அந்த வகையில் நேற்று தனது தந்தையின் பிறந்தநாள் ஸ்பெஷலாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.இந்த புகைப்படத்தில் ரஜினிகாந்த் தனது பேரன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் இருந்தார். இதை பார்க்கும் பொழுது நேற்று தனது பேரன்களுடன் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார் என தெரிகிறது.
இந்நிலையில், இந்த புகைப்படத்தில் தனுஷின் மூத்த மகன் கையில் காயம் ஏற்பட்ட கட்டு போட்டிருப்பதாக தெரிகிறது.இதை கவனித்த ரசிகர்கள், யாத்ரா கையில் என்ன ஆனது என்று கேட்டு வருகிறார்கள்.






