காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை வலுப்பெறக் கூடும்..!
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவாக இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறும் என்று வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. இந்த புயல் வரும் எட்டாம் தேதி வட தமிழகத்தை நெருங்குவதாக கணிக்கப்பட்டுள்ளது.
தெற்கு அந்த மான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் என கூறப்பட்டுள்ளது.






