அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு..!
ஜார்கண்ட் மாநிலம் ராம்கர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தையின் வயிறு வீங்கி இருப்பதை பார்த்து மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்து அனைத்து சோதனைகளும் செய்து பார்த்த பொழுது வயிற்றில் கட்டி இருப்பதாக முடிவுக்கு வந்தனர்.
அதன் பிறகு மருத்துவர்கள் அந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்து குழந்தைக்கு வயிற்றிலிருந்து கட்டியை நீக்க அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அறுவை சிகிச்சை செய்யும் பொழுது வயிற்றில் உள்ள கட்டியில் எட்டு கரு உருவாகி இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தற்பொழுது கருக்களை வெளியே எடுத்து குழந்தையை காப்பாற்றியுள்ளனர். பிறந்து 21 நாட்களான பெண் குழந்தையின் வயிற்றில் 8 கரு இருந்துள்ள சம்பவம் மருத்துவ உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





