போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது போலீசார் தடியடி..!
உத்திர பிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டதையடுத்து பெண்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் சிலை அமைந்திருந்த இடம் தொடர்பாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கலைக்க முயற்சித்த பொழுது அவர்கள் மீதும் போலீஸ் வாகனங்களின் மீதும் பெண்கள் கற்களை வீசியதாக தெரிகிறது. இதனால் தடியடி நடத்தியதாக போலீசார் கூறியுள்ளனர்.





