கல்லூரி மாணவனை கடத்தி சென்று திருமணம் செய்த பெண்..!
ஓமலூர் அருகே கல்லூரி மாணவனை கடத்தி சென்று திருமணம் செய்ததாக பெண் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் தனியார் கல்லூரியில் பி காம் முதலாம் ஆண்டு படித்து வரும் தங்களது மகனை காணவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் பெற்றோர் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதனடிப்படையில் மாணவனை போலீசார் தீவிரமாக தேடிய நிலையில் வாசுகி என்பவர் திருமண வயதை அடையாத மாணவனை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.





