நர்சுகள் கோபப்பட்டு குழந்தையை அடித்ததாக புகார்..!
சென்னை ஜாபர்கான் பேட்டையை சேர்ந்த அருண்குமார் என்பவர் தனது மகளுக்கு உடல்நிலை சரியில்லாததால் காஞ்சி காமகோடி குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
மருத்துவமனையிலிருந்து நர்ஸுகள் ஊசி போட முயன்ற பொழுது குழந்தை அழுதுள்ளது. இதனால் நர்சுகள் கோபப்பட்டு குழந்தையை அடித்ததாக புகார் எழுந்துள்ளது. தொடர்ந்து குழந்தையின் தந்தை புகார் கொடுத்துள்ளார்.





