நேரு உள் விளையாட்டு அரங்கத்திற்கு வருகை தந்த முதலமைச்சர்..!
நேரு உள் விளையாட்டு அரங்கத்திற்கு வருகை தந்திருக்கிறார் முதலமைச்சர் மு க ஸ்டாலின். இதன் காட்சி தற்போது வெளியாகியுள்ளது. நாற்பத்தி நான்காவது செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழா இன்னும் சற்று நேரத்தில் நேரு உள்விளையாட்டு தொடங்கி நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்பதற்காக வந்துகொண்டிருக்கிறார். முதலமைச்சர் மு க ஸ்டாலின் உடன் செல்ல உதயநிதி ஸ்டாலினும் வந்துகொண்டிருக்கிறார். முன்னதாக கடந்த 28ம் தேதி நாற்பத்தி நான்காவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தொடக்க விழா நடைபெற்றது.
பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று இந்த விழாவினை தொடக்கி வைத்தார். அதில் பல கலை நிகழ்ச்சிகளும் பங்கேற்க பட்டன.





