ஸ்ரீமதி கைப்பட எழுதிய பழைய நோட்டுகள் எடுத்து செல்லப்பட்டது..!
வேப்பூர் அருகே உள்ள பெரியநெசலூர் கிராமத்திற்கு சென்ற சிபிசிஐடி போலீசார் ஸ்ரீமதி கைப்பட எழுதிய பழைய நோட்டுகளை விசாரணைக்கு எடுத்து சென்றனர். சின்ன சேலத்தில் மாணவியின் மரணம் ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த 28ம் தேதி சொந்த ஊர் அருகே உள்ள ஒரு மாணவியின் பெற்றோரிடம் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவர் எழுதிய கடிதம் ஒன்று இருந்ததாகவும் அது சம்பந்தமாக விசாரணை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் மாணவி ஸ்ரீமதி வீட்டிற்கு வந்த சிபிசிஐடி போலீசார் மாணவிகள் எழுதிய பழைய நோட்டுகள் இரண்டை விசாரணைக்காக எடுத்துச் சென்றனர்.





