12 மீட்டர் உயர பாலத்தின் மீது ஆபத்தான சாகசம்..!
ஆபத்தான முறையில் 12 மீட்டர் உயரம் உள்ள பாலத்தின் ஆர்ச் மீது இரண்டு இளைஞர்கள் ஏறி சாகசம் செய்யும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள பகுதியில் 12 மீட்டர் உயரமுள்ள ஆர்ச் அமைந்து உள்ளது.
இதன் மீது இரண்டு இளைஞர்கள் எந்தவித பாதுகாப்பு கருவிகளும், உயிர் காப்பு நடவடிக்கைகளும் எடுக்காமல் ஆபத்தான முறையில் ஏறி சாகசம் செய்துள்ளனர். இரண்டாவது முறையாக செய்யப்படும் இந்த சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் யார் என்பது கண்டறியப்படவில்லை.
ஆனால் முதன் முறை இதுபோன்று சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.






