66 சிறார்கள் இறப்பிற்கு காரணமான இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தம்..!
ஹரியானாவில் உள்ள மேட் இன் ஃபார்மா நிறுவனத்தில் உற்பத்தியை நிறுத்த அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஃபார்மா நிறுவனத்தில் ஒரு இருமல் மருந்து உட்கொண்ட 66 சிறார்கள் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து ஹரியானாவில் உள்ள நிறுவனத்தில் அம்மாநில அரசு பரிசோதனை மேற்கொண்டது. இந்த நிலையில் மருந்து நிறுவனத்தில் உற்பத்தியை நிறுத்துமாறு அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.





