மின்கட்டண உயர்வுக்கு காரணம் என்ன?- அரசுக்கு சீமான் கேள்வி
தமிழ்நாட்டில் வீடுகளுக்கான மின்கட்டணம் வழக்கத்தை விட 4 மடங்கு வரை உயர்ந்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மின்கணக்கீட்டில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளால் அதிகரித்துள்ள கூடுதல் கட்டணத்தை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் எனத் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
மின் கணக்கீட்டு குளறுபடிகளால் மக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கூடுதல் மின்கட்டணத்தை அரசு முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி, மாதம் 200 அலகுகள் இலவச மின்சாரம் வழங்குவதற்கான அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் சீமான்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




