--- --:--:-- --

‘திருப்பூரின் வளர்ச்சி பல்லடத்திலும் தொடரட்டும்’… வாக்குறுதி தந்து செல்வராஜ் பிரசாரம்!

செல்வராஜ்

உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்ட செல்வராஜ், மக்களின் குறைகளை அக்கறையோடு கேட்டார்.

பல்லடம்: “திருப்பூரின் அசுர வளர்ச்சி இனி பல்லடத்திலும் எதிரொலிக்கும்” என்ற அதிரடி முழக்கத்தோடு, திமுக வேட்பாளர் க. செல்வராஜ் பல்லடம் தொகுதியில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பல்லடம் தொகுதி திமுக வேட்பாளர் க. செல்வராஜ், தொகுதிக்குட்பட்ட கிராமப்புறங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக பொங்கலூர் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியங்களுக்கு உட்பட்ட மந்திரிபாளையம், கேத்தனூர், மனாசிபாளையம் ஆகிய பகுதிகளில் அவர் மேற்கொண்ட பிரச்சாரம், தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெயிலை வென்ற வேட்பாளர்!

சுளுக்கியடிக்கும் கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல், அதிகாலை முதலே களத்தில் இறங்கிவிட்டார் செல்வராஜ். வயது முதிர்வைக் காட்டிலும் அவரது சுறுசுறுப்பு இளைஞர்களுக்கே சவால் விடும் வகையில் அமைந்துள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் மக்களுடன் நேரடியாகக் கைகுலுக்கியும், முதியவர்களின் ஆசீர்வாதம் பெற்றும் அவர் வாக்கு சேகரித்த விதம், தொகுதி மக்களிடையே “மக்களில் ஒருவர்” என்ற பிம்பத்தை வலுப்படுத்தியுள்ளது.

 

selvaraj MLA
பல்லடம் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் செல்வராஜ்.

தன் பயணத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய செல்வராஜ் கூறும்போது, “பொங்கலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் நான் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது, மக்கள் காட்டிய எழுச்சியும் அன்பும் எனக்குப் புது தெம்பைத் தருகிறது. ஒவ்வொரு வீதியிலும் மக்கள் அளிக்கும் உற்சாக வரவேற்பு, நமது வெற்றியை இப்போதே உறுதி செய்துவிட்டது. மக்களின் நலனே எனது முதல் பணி” என்றார் நம்பிக்கையோடு.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon