100 நாள் வேலைத் திட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் தனி தீர்மானத்தை ஸ்டாலின் முன்மொழிந்தார்!

100 நாள் வேலைத் திட்டம் தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனி தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.

 

அதில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “நம் மாநிலத்தின் மீது ஏன் இந்த ஓரவஞ்சனை என்றுதான் நாம் கேட்கிறோம்?. 100 நாள் வேலைத் திட்டத்துக்கு ரூ.2700 கோடி நிதியை ஒன்றிய அரசு இதுவரை விடுவிக்கவில்லை. வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்திலும் ரூ.3112 கோடி நிதி விடுவிக்கவில்லை,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.