விஜயின் பரப்புரை கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி

டிச.9ஆம் தேதி புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் தவெக தலைவர் விஜயின் பரப்புரை கூட்டத்தை நடத்திக்கொள்ள காவல்துறை அனுமதிஅளித்துள்ளது. கூட்டத்தில் 5,000 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். கியூ.ஆர்நுழைவுச் சீட்டு இல்லாதவர்களை அனுமதிக்கக் கூடாது.

 

குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்களை கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த யாரும் கூட்டத்தில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.