தீபாவளியையொட்டி கடைகளில் அலைமோதும் மக்கள்- முக்கிய இடங்களில் போலீஸ் அணிவகுப்பு

விருத்தாசலம் பகுதியில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி விருத்தாச்சலம் துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் விருத்தாச்சலம் உட்கோட்டம் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளுநர்கள் கவாத்து பயிற்சி நடைபெற்றது.

 

பின்னர் தீபாவளி பண்டிகை முன்னிட்டு நகர மக்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விருதாச்சலம் எஸ்.பி.ஐ வங்கி, பாலக்கரை,பேருந்து நிலையம்,கடைவீதி தென்கோட்டை வீதி ஆகிய இடங்களில் கொடி அணிவகுப்பு மேற்கொள்ளப்பட்டது.