24 மணிநேரமும் கடைகளை திறந்து வைப்பதற்கான அனுமதியை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்மூலம், 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் கடைகள், வணிக நிறுவனங்கள் 24 மணிநேரமும் செயல்படுவதற்கான அனுமதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 4-ம் தேதியோடு கால அவகாசம் நிறைவடைய உள்ள நிலையில், கால நீட்டிப்பு செய்வதாக CM ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்து இருந்தார்.