பத்திரிகை சுதந்திரத்தை உறுதி செய்யும் வகையில், ஐநா பொதுச் சபை 1993-ல் மே 3-ம் தேதியை உலக பத்திரிகை சுதந்திர தினமாக அறிவித்தது.
ஜனநாயகத்தின் 4-வது தூணான பத்திரிகை, நடந்த சம்பவத்தை உள்ளது உள்ளபடியே மக்களுக்கு தெரியப்படுத்த அரசியல், அதிகாரம் தலையீடில்லாமல் இருக்க வேண்டும். இந்த முயற்சியில் உயிரிழந்தவர்களை நினைவில் கொள்ளும் ஒரு நாளாகவும் இது அனுசரிக்கப்படுகிறது.