தஞ்சாவூர் பெரியகோவிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு 18 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழா கடந்த 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் விழா நாட்களில் காலை, மாலையில் சாமி புறப்பாடும், திருமுறை இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது.
சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 7-ந் தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது. அன்று காலை 5.30 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் தேர் வடம்பிடித்து இழுக்கப்படுகிறது. தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டு தஞ்சையில் உள்ள 4 ராஜவீதிகளிலும் வலம் வருகிறது.
இந்த நிலையில், தஞ்சை பெரிய கோவில் தேரோட்டத்தையொட்டி, வருகிற 7-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார். மேலும் இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 24-ம் தேதி (சனிக்கிழமை) மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் செயல்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள் :
பள்ளிகள் திறப்பு: ஸ்பெஷல் பஸ்கள் இயக்க திட்டம்..!
பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்!
கோவை குற்றாலத்திலும் குளிக்கத் தடைவிதிப்பு..!
டெல்லியில் இன்று நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!
நயினார் நாகேந்திரன், எல்.முருகனை திடீரென சந்தித்த திருமாவளவன்..!
துணியை சரியாக தைக்காத டெய்லர் குத்திக் கொலை