மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் கூடாது: பிரதமருக்கு கடிதம்
மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்க அனுமதியை உடனடியாக ரத்து செய்யக்கோரி பிரதமருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், மாநில அரசின் அனுமதி இல்லாமல் சுரங்க உரிமை ஏலங்களை மேற்கொள்ளக் கூடாது எனவும் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் திட்டங்களுக்கு தமிழகத்தில் இடமில்லை என்றும், முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




