தலைக்கேறிய போதையில் சாலையில் கிடந்த இளைஞர்கள்..!

சென்னை அடையாறு பகுதியில் போதையில் மயக்கத்தில் சாலையில் படுத்து கிடந்த இருவரையும் போலீசார் தட்டி எழுப்பி எவ்வித அசைவும் இன்றி கிடந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின. கஞ்சா போதையில் இது போன்று கிடப்பதாக கண்டனங்கள் எழுந்தன.

 

இந்த நிலையில் இருவரும் வேலை தேடிச் சென்ற புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் என்றும் வேலை கிடைக்காதுதால் மது அருந்திவிட்டு சாலையில் படுத்து உறங்குவதாகவும் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.